தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருச்சியின் கொப்பாவளி ஊராட்சியில் மகளிர் ஆட்சி!

மதுரையில் மீனாட்சி, காஞ்சியில் காமாட்சி, காசியில் விசாலாட்சி வரிசையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் மகளிர் ஆட்சி அமைந்துள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2019, 6:59 am

மதுரையில் மீனாட்சி, காஞ்சியில் காமாட்சி, காசியில் விசாலாட்சி வரிசையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சியில் மகளிர் ஆட்சி அமைந்துள்ளது.

ஊராட்சித் தலைவர், 6 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள கொப்பாவளி ஊராட்சி.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 404 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் 404 ஊராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் 3,408 வார்டு உறுப்பினர்களுக்கு டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ஆம் தேதி என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

அனைத்து இடங்களுக்கும் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்டு, வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கடந்த 19ஆம் தேதி இறுதிநாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், லால்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கொப்பாவளி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவி மற்றும் 6 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்தனர். இவர்களை எதிர்த்து யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து அந்த 7 பேரும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கொப்பாவளி கிராம ஊராட்சித் தலைவராக, மதிமுக பிரமுகரான ப. செல்வராணி போட்டியின்றி தேர்வாகியுள்ளார். இந்த ஊராட்சியில் மொத்தம் 6 வார்டுகள் உள்ளன. இதில் 3 வார்டுகள் பெண்களுக்கும் 3 வார்டுகள் பொது என்று ஒதுக்கப்பட்டுள்ளது. பொது வார்டிலும் பெண்களே போட்டியிடச் செய்யப்பட்டுள்ளனர்.

இதில், ஒரு இடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  6 வார்டுகளிலும் கல்பனா, மனோகரி, காயத்ரி, ஜெயலலிதா, கவிதா, சாந்தி என பெண்களே, போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

முதல் முறையாக கிராம ஊராட்சித் தலைவராகவும், வார்டு உறுப்பினர்களாகவும் முழுக்க முழுக்க பெண்களே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். 

போட்டியின்றி தேர்வாகியுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை மதிமுக மகளிரணிச் செயலர் மருத்துவர் ரொக்கையா மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.  சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றங்களில் மகளிருக்கான இடஒதுக்கீட்டுக்கு குரல் வலுத்து வரும் நிலையில் ஊராட்சியில் முழுவதும் பெண்களே ஆட்சி என்பதை அனைவரது விழிகளையும் வியப்படையச் செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.