தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

திருச்சியில் போட்டியின்றித் தேர்வான 12 ஊராட்சித் தலைவர்கள்

திருச்சி மாவட்டத்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊராட்சி மன்றத் தலைவர்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சு. சிவராசு வெளியிட்டுள்ளார்.

News image

election

Updated On :26 டிசம்பர் 2019, 9:13 am

திருச்சி மாவட்டத்தில் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ள 12 ஊராட்சி மன்றத் தலைவர்களின் விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் சு. சிவராசு வெளியிட்டுள்ளார்.

லால்குடி ஊராட்சி ஒன்றியத்தில் கொப்பாவளி ஊராட்சி மன்றத் தலைவர் - ப. செல்வராணி, மாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர்- பெ. ராமலிங்கம், கோமாகுடி ஊராட்சி மன்றத் தலைவர்- பா. ரவி ஆகிய 3  பேர் போட்டியின்றித் தேர்வாகியுள்ளனர். துறையூர் ஊராட்சி ஒன்றியத்தில் நாகலாபுரம் ஊராட்சி மன்றத் தலைவராக கி. நாராயணசாமி தேர்வாகியுள்ளார்.

மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் மணியங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவர்- சி. அம்மாக்கண்ணு, கொடும்பப்பட்டி ஊராட்சித் தலைவர்- பி.எஸ். வேட்டை, உசிலம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்- பா. பொம்மநாயக்கர், அதிகாரம் ஊராட்சி மன்றத் தலைவர்- பா. துரைசாமி ஆகிய 4 பேர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் பேரூர் ஊராட்சி மன்றத் தலைவராக என். கிருஷ்ணம்மாள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் பி.என். சத்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக எஸ். பால்ராஜ்,சேதுராப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக டி. வசந்தா ஆகிய இருவர் தேர்வாகியுள்ளனர். புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் நம்புகுறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக ம. செல்வராஜ் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.