இத்தனைக்கும் கிங்கின் இளைமைக்காலம் அத்தனை ஒன்றும் அன்பும், அரவணைப்பும் கொட்டி முழக்கவில்லை. மிக இளம் வயதிலேயே கிங்கின் அம்மா, அவரது அப்பாவை விட்டு விட்டு வேறு ஒரு மனிதருடன் வாழச் சென்று விட்டார். கடைசியில் கிங் தனது அம்மா வழிப் பாட்டியின் பொறுப்பில் தான் வளர்ந்து வர வேண்டிய சூழல் உருவானது. அப்போதெல்லாம் ஆறுதலுக்காகவும் தன்னைத் தானே மீட்டுக் கொள்ளவும் கிங் அருகிலிருக்கும் தேவாலயத்துக்குச் செல்வதுண்டு. அங்கு கிறிஸ்தவ மதப்பாடல்களைப் பாட காயர் எனப்படும் இசைக்குழுக்கள் உண்டு. முதலில் அவற்றின் பாடல்களிலும், இசையிலும் ஈர்க்கப்பட்டு தேவாலயப் பாடகரான கிங்குக்கு கிடாரின் மேல் ஆர்வம் மிகுதியானது அதன் பின்னரே. இப்படித்தான் கிங் உலகறியும் இசைக்கலைஞர் ஆனார்.