அதாவது அக்கா, தன் வருங்காலக் கணவரிடம் திருமணத்திற்காகப் புரப்போஸ் செய்யும் போது அவளது முகத்தில் தெரியும் வெட்கம், திடீர் பரவசம், குதூகலம் இதையெல்லாம் மிகத் துல்லியமாகப் படம் பிடிக்க வேண்டி தங்கை தன்னை ஒரு புதர் போல ஜோடித்து அவர்களுக்கு அருகில் இருந்த புதரொன்றில் கேமிராவுடன் மறைந்து கொண்டாள். தங்கை இருப்பதை உணராத அக்காவும் அவரது வருங்காலக் கணவரும் தங்களது திருமணத்திற்காக ஒருவருக்கொருவர் புரப்போஸ் செய்து கொள்ளும் அற்புதக் கணத்தை நிகழ்த்தினர். அதை அப்படியே காட்சிப் படுத்திய தங்கை அப்படியே ட்விட்டரில் பகிர்ந்தார். மேலை நாடுகளைப் பொருத்தவரை எல்லா திருமண புரப்போஸல்களும் சுபமாகத் திருமணத்தில் முடிவதில்லை. ஆனால், தங்கை இத்தனை சிரத்தையாகப் படம் பிடித்த இந்த புரப்போஸல் அப்படியே அந்த வார இறுதியிலேயே திருமண நிச்சயதார்த்தத்தில் முடிந்தது என்ற தகவலையும் அந்த சமத்காரத் தங்கை தனது ட்விட்டர் பகிர்வில் பகிர்ந்துள்ளார்.