அடப்போங்க! வெங்காயமும், பூண்டும் உரித்துப் போட்டு எண்ணெயில் வேக விட்டால் ஒரு மணம் வருமே! அதற்கு ஈடாகுமா? வெங்காயம் இல்லாத சமையல்? என்று அலுத்துக் கொள்வோர் கவனத்துக்கு.. வெங்காயம் இல்லாவிட்டால் ஒன்றும் நஷ்டமாகி விடாது. மனிதன் வெங்காயம் கண்டிபிடிப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு வாசனைக்காக சீரகம், கடுகு, வெந்தயம், கொத்துமல்லி விதை, எனப் பலவகையான அஞ்சறைப்பெட்டி சமாச்சாரங்களைப் பயன்படுத்தி வந்திருக்கிறான். அவற்றைக் கொண்டு இன்றும் கூட நம்மால் வெங்காயம் இல்லாத சுவையான பண்டங்களைத் தயாரிக்க முடியும் என்று நம்புங்கள்.