ராஜாவின் இசையைக் கேட்டு மெய்மறந்து ரசித்து சிற்சில தருணங்களில் அவரைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்து திக்குமுக்காடச் செய்வது எம் எஸ் வி ஸ்டைல். ஒருமுறை ராஜாவின் இசை நிகழ்ச்சியொன்றில் மூன்றாம் பிறை திரைப்படத்தின், ‘கண்ணே கலைமானே’ பாடலைப் பாட ஆயத்தம் நடந்து கொண்டிருந்தது. அப்போது ராஜாவை அணுகிய எம் எஸ் வி, டேய், இந்தப் பாட்டுக்கு நான் ஆர்மோனியம் வாசிக்கட்டுமா/ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ராஜா, ஆனந்த அதிர்ச்சியில், ‘என்னண்ணே, இப்படிக் கேட்கறீங்க, என்று அதை முழு மனதுடன் அங்கீகரிக்க, எம் எஸ் வி ஆர்மோனியம் வாசிக்கத் தொடங்கினார். பாடலில்,