ஞாயிறு அன்று இரவு, அந்த 8 இளைஞர்களும் அபார்மெண்டின் மாடியில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்திருக்கின்றனர். குடிபோதையில் அவர்களின் உரையாடல் எல்லை மீறி கூச்சலாக மாறி இருக்கிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத கண்ணப்பனும் அவரது சகோதரர் பாஸ்கரும் அவர்களிடம் சென்று ஆட்சேபணை தெரிவித்திருக்கின்றனர். ஆனால், குடிவெறியில் அவர்கள் கண்ணப்பனின் கோரிக்கையையோ, ஆட்சேபணையையோ ஏற்காமல் மீண்டும் கூச்சலிட்டு குடிக்கத் தொடங்கி இருக்கின்றனர். கண்ணப்பனும் அவரது சகோதரரும் மீண்டும் மீண்டும் அவர்களது செயலை கண்டிக்கவே, குடிவெறியில் அந்த 8 இளைஞர்களும் இவர்களை கடுமையாகத் தாக்கத் தொடங்கி இருக்கின்றனர். அவர்களது குடிவெறித் தாக்குதலுக்கு கண்ணப்பன் மனைவி ரஞ்சனியும் தப்பவில்லை. ரஞ்சனிக்கு கையிலும், பாஸ்கரனுக்கு தலையிலும் பலமான அடி. இதனால் கோபம் தலைக்கேறிய கண்ணப்பன் உடனடியாக வீட்டுக்குள் ஓடி, தான் வெள்ளி வேலை செய்யும் போது பயன்படுத்தவென்று வைத்திருந்த அமில பாட்டிலை எடுத்து வந்து அந்த 8 இளைஞர்களின் மீது விசிறியடித்திருக்கிறார். அந்த 8 இளைஞர்கள் பெயர்கள் முறையே; அழகுமுத்து (38), கருப்புசாமி(32), வாஞ்சிநாதன்(18), வேல்முருகன்(23), வீராசுவாமி(23), அசோக்(19), வேல்முருகன்(25), வேல்முருகன்(23).