வெள்ளைக்காரராக இருந்து கொண்டு தமிழர் பாரம்பர்ய விவசாய முறைகளில் ஈடுபாடு வந்தது எப்படி என்ற கேள்விக்கு, நான் தமிழ்நாட்டுக்கு வந்து சிதம்பரம் பார்த்தேன், பரத நாட்டியம் பார்த்தேன், இங்க இருக்கற நாட்டுக்காய்கறிகள், பழங்கள் மற்றும் கிழங்குகளைப் பார்த்தேன். என்னால் இந்த மண்ணின் மகத்துவத்தை உணர முடிந்தது. இங்கேயே வாழந்தால் என்ன என்று தோன்றியது. இந்த ஊர்ப்பெண்ணையே திருமணம் செய்து கொண்டு இயற்கை விவசாயம் செய்து கொண்டு இங்கேயே தங்கிவிட்டேன். பாண்டிச்சேரி ஆரோவில்லில் நான் ஒரு ஹோட்டல் நடத்துகிறேன், அதில் நாட்டுக்காய்கறிகளுக்குத் தான் முதலிடம். தினம் சுண்டைக்காய், வாழைப்பூ, வாழைத்தண்டு, முடக்கத்தான் கீரை, பண்ணைக்கீரை, பப்பாளிக்காய் கூட்டு, நாட்டுப்பழங்களில் சாலட், என்று வெரைட்டியாக சத்தான உணவுகளைச் சமைத்துத் தருகிறேன். 4 மணிக்கு ஹோட்டலை மூடி விடுவேன். குடும்ப வாழ்க்கை இருக்கே, அதனால் காலையும், மதியமும் மட்டும் ஹோட்டல் என்று சிரிக்கிறார். கிருஷ்ணாவின் ஹோட்டல் பெயர் இயற்கை. அதற்குத் தேவையான காய்கறி மற்றும் பழங்களை அவர் தனது பண்ணை மற்றும் வயலில் இருந்தே பெறுகிறார். எதையும் விலைக்கு வாங்குவதில்லை.