இந்த வரிகளைக் கேலியும் கிண்டலுமாகப் பாடிக் கொண்டே கிராமம் முழுக்க வலம் வந்து ஜாதி வித்யாசம் பாராமல் எல்லா வீடுகளிலும் இருக்கும் பதார்த்தங்களை (கம்மஞ்சோறு, கேழ்வரகுக் கூழ் ,அரிசிச்சோறு, நீராகாரம் ஊற்றி ஊற வைத்த பழைய சாதம் முதற் கொண்டு உப்புக் கருவாடு... கத்தரிக்காய் புளிக் கூட்டு, பச்சை வெங்காயம், பாசிப் பருப்பு துவையல், கானத் துவையல் (குதிரை சாப்பிடுமே கொல்லு அது தான் கானப் பயிர்) இப்படி சகல வீடுகளிலும் போடப்படும் எல்லா உணவுகளையும் ஒரு பெரிய பாத்திரத்தில் சேகரம் பண்ணிக் கொண்டு ஊரின் எல்லாத் தெருக்களையும் பாட்டுப் பாடிக் கொண்டே கொண்டாட்டமாக சுற்றி வருவார்கள்.