இப்பகுதி குழந்தைகளின் இறப்பிற்கு லிச்சிப் பழங்களை உண்டது தான் காரணம் என அரசு பொது மருத்துவரும் வேலூரைச் சேர்ந்த டாக்டர் ஜான் மற்றும் டாக்டர் அருண் ஷா இணைந்து சமர்பித்த ஆய்வுக் கட்டுரையும் உறுதியாகக் கூறிய பின்னரும். குழந்தைகளின் தொடர் இறப்புக்குக் காரணம் லிச்சிப் பழங்கள் அல்ல என்று மறுத்திருக்கிறார் முஸாஃபர்பூர், ஸ்ரீ கிருஷ்ணா மெடிக்கல் காலேஜ் மூத்த மருத்துவரும், குழந்தைகள் நலத்துறை தலைமை மருத்துவரும், உள்ளூர் மருத்துவ ஆய்வாளருமான டாக்டர் கோபால் ஷங்கர் சாஹ்னி. ஏனெனில், அக்யூட் என்செபாலிட்டீஸ் காரணமாக நிகழும் குழந்தைகளின் தொடர் மரணம் குறித்து 1995 ஆம் ஆண்டு முதலே ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருபவர் அவர். லிச்சிப் பழங்களினால் தான் மரணம் ஏற்படுகிறது என்றால், அந்தப்பகுதியில் இன்னும் லிச்சி விளையும் கிராமப்பகுதிகள் நிறைய இருக்கின்றன. அங்கிருக்கும் குழந்தைகளுக்கும் இந்தப்பாதிப்பு இருக்க வேண்டுமில்லையா? அங்கெல்லாம் இப்படிப் பட்ட மரணங்கள் இல்லையே! அப்படியானால், குழந்தைகளின் தொடர் இறப்பிற்கு லிச்சிப் பழங்கள் மட்டுமே காரணம் இல்லை என்பது தெளிவாகிறது. லிச்சி சீஸனில் குறிப்பிட்ட பகுதியில் வசிக்கும் குழந்தைகள் மட்டும் கொத்துக் கொத்தாக் அக்யூர் என்செபாலிட்டீஸ் பாதிப்புக்கு உள்ளாகி உடனடியாக மரணிக்க காரணம் என்னவாக இருக்கும் என்பதை நாம் தொடர் ஆராய்ச்சிகளின் விளைவாகத்தான் கண்டறிய வேண்டுமே தவிர அவசரப்பட்டு லிச்சிப் பழங்களின் மீது பழியைப் போட்டு விஷயத்தை முடித்து விடக்கூடாது என்கிறார் இவர்.