ஃபிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் நான்கு இளைஞர்கள் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஹம்பிக்கு சுற்றுலா சென்றிருக்கிறார்கள். ஹம்பி சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்று. விஜயநகர சாம்ராஜயத்தை உருவாக்கியவர்களுள் மூலவர்களான ஹரிஹரர் மற்றும் புக்கர் காலத்தில் பிரிசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றாக ஹம்பி விளங்கியதற்கான சரித்திரக் குறிப்புகள் உண்டு. இங்கிருக்கும் விருபாஷர் ஆலயம் இந்திய கோயில் கட்டடக் கலைக்கு மிகப்பெரிய சான்று. இங்கு இப்போதும் புராதனத்தின் மிச்சங்களாக பிரும்மாண்டமான கற்கோயில்களும், சிற்பங்களும், கடவுள் ரூபங்களும் உண்டு. அவற்றில் ஒன்றில் மேற்கண்ட நான்கு இளைஞர்களும் தங்களது பலத்தைப் பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார்கள்.