இல்ல, அப்போ ரொம்ப ஈஸி லைஃப், லக்ஸுரியஸ் லைஃப். எவ்ரிபடி லிவ்டு இன் ஹேப்பினஸ். ஒரு மனுஷனும், இந்தியா இண்டிபெண்டன்ஸ் வந்துதே, இந்த பொலிடீசியன்ஸ் தான் ஜாஸ்தி ஹெல்ப் பண்ணாங்களே ஒழிய ஆஃபீஸர் வேலை பண்ணிண்டிருந்தவா ஒருத்தரும் கவனிக்கவே இல்லை அதை. எனக்குத் தெரிஞ்சவரைக்கும் எங்க அப்பா, அம்மால்லாம் கவர்மெண்ட்ல வேலை பண்ணிண்டிருந்தா, அவாள்லாம் கவனிக்கல, பேப்பர்ல படிச்சா அவ்ளோ தான் ஏதோ ஒன்னு நடந்துட்டுப் போறது அப்படின்னு அதோட விட்டுட்டா. தே வேர் ஆல் வெரி ஹேப்பி டியூரிங் த பிரிட்டிஷ் ரூல். டிராயிங் வெரிகுட் சேலரி. சின்ன சேலரியா இருந்தாலும் லைஃப் வாஸ் ஸோ சீப் இன் தோஸ் டேய்ஸ். மாசச்செலவு 400 ஐத் தாண்டாது. மாசமான எலெக்ட்ரிசிட்டி பில் 15 ரூபா தாண்டாது. ஆனா, இன்னைக்குப் பாருங்க சம்பளம் எவ்வளவு நிறைய வருது. ஆனா, என்ன லாபம், யாருக்கும் அது போறாது. இப்ப யாரும் பொறுப்பா வேலை பண்றதே இல்லை. ஆனா, பிரிட்டிஷ்காரன் காலத்துல எல்லாமே பெர்ஃபெக்டா இருக்கும். இத்தனை மணிக்கு லஞ்ச் ன்னா அத்தனை மணிக்கு லஞ்ச்க்குப் போவான். இத்தனை மணிக்கு திரும்ப சீட்ல இருக்கனும்னா அத்தனை மணிக்கு கரெக்டா சீட்ல இருப்பான். ஒரு நிமிஷம் முன்னால, பின்னால நேரம் விரயமாகாது. அதெல்லாம் வெள்ளைக்காரன் காலத்துல தான் நடக்கும். இப்ப அதெல்லாம் கிடையாது. இவங்க எங்க வேலை செய்யறாங்க. எல்லாம் ஃபிராடு. ஒருத்தன் தப்பு பண்ணினா உடனே உள்ள போடனும். அதெல்லாம் பண்றதில்லை. இப்ப நான் எனக்கு ஏற்பட்ட வுமன்ஸ் ஹாஸ்டல் பிரச்சினையைப் பத்தி சொன்னேன்ல, அவங்க பண்ணது தப்பு, ஆனா, அவங்களை ஒன்னும் பண்ண முடியலை. அரசு அதிகாரிங்க எல்லாம் இங்க லஞ்சம் வாங்கறாங்க. அதை நான் சொல்லல.. சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் சொல்லிருக்கார். 'Nothing can be done in this government without payment of money'அவ்ளோ தான். இன்னி வரைக்கும் அதான்.