மேலே குறிப்பிட்ட இரு சம்பவங்களில் ஒன்று கதை... அதிலும் ஒரு அப்பா, தன் மகனைக் காப்பாற்றி விடத் துடிக்கிறார். அதிலாவது மகன் காணாமல் போகவில்லை நோய்வாய்பட்டு ஸ்கைப் வழியாகத் தந்தையின் கண்முன்னே இருக்கிறார். நண்பரும், மருத்துவரான தந்தையும் மனது வைத்து பிரயத்தனப்பட்டால் அவரைக் காப்பாற்றி விட 100 ல் 50 % வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால், இரண்டாவது சம்பவம், அப்பட்டமான உண்மை. இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் தந்தைக்கு... காணாமல் போன மகனை கண்டு பிடிப்பது மிகப்பெரிய சவால். அதிலும் இந்தியாவில் காணாமல் போயிருந்தால் கூட தனது அரசியல் செல்வாக்கையும், காவல்துறை செல்வாக்கையும் கொண்டு எப்படியாவது மகனை மீட்டு விடலாம் என்று அவர் நம்பிக்கை கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால், இங்கே மகன் காணாமல் போன இடமோ லண்டன்.