இருவரும் தனித்தனியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். நாட்கள் செல்லச் செல்ல விஜயாவின் பேசும் திறன் பறிபோனது. சுமார் 24 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த விஜயா, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினியின் உதவியால் 2013 ஆம் ஆண்டில் முன் விடுதலை செய்யப்பட்டார். விடுதலை ஆன நாள் முதலாக விஜயா அறியூரில் உள்ள தஞ்சம் முதியோர் இல்லத்தில் தனது கணவரின் வருகைக்காகக் காத்திருந்தார். எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தற்போது சிறையிலுள்ள சுப்ரமணியம் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பேசும் திறனை இழந்த போதும் சிறையிலிருந்து கணவர் விடுதலையாகித் தன்னிடம் வந்து சேர்ந்த போது அவரை மாமா என அழைக்கும் விஜயாவின் ஆர்வம் பொங்கும் குரலிலும், சந்தோசத்தை வெளிப்படுத்தும் முகபாவனைகளிலும் குற்றமற வெளிப்படுகிறது அவருக்குத் தன் கணவர் சுப்ரமணியத்தின் மீதுள்ள எல்லை கடந்த அன்பு. தான் தங்கியிருக்கும் முதியோர் இல்லத்தில் இருப்பவர்கள் அனைவரிடமும் சுப்ரமணியத்தைக் காட்டி மாமா, என் மாமா என்று அறிமுகப்படுத்தி வைக்கிறார் விஜயா. காலம் இவர்களை சிறையில் தள்ளினாலும் காலம் கடந்தும் காதலும். அன்பும் தீராமல் பேருவையுடன் ஒன்றிணைந்திருக்கும் விஜயாவையும் சுப்ரமணியத்தையும் உண்மையான காதலுக்கு சாட்சியாக எப்போதும் நினைவுகூரலாம்.