முன்பெல்லாம் இல்லத்தரசிகள் பொங்கலுக்கும், திபாவளிக்கும், புது வருஷத்துக்கும் மொத்தமாக வீட்டை ஒழிக்கும் போது இந்தப் பழைய துணிகளை எடுத்து தனியாகப் பிரித்து மூட்டை கட்டி பாத்திரக்காரனுக்கோ, பேரீச்சம் பழக்காரனுக்கோ எடைக்கு எடை போட்டு அதற்கு ஈடாக இட்லிப்பானையோ, டிஃபன் பாக்ஸோ, ஈயப்பாத்திரமோ, பெரிய பிளாஸ்டிக் பேசினோ, அல்லது பேரீச்சம் பழங்களோ வாங்கிக் கொள்வார்கள். நகரங்களில் தற்போது பாத்திரக்காரர்களையோ, பேரீச்சம் பழக்காரர்களையோ காண முடிவதில்லை. குப்பை சேகரிப்பவர்களிடம் பலர் பழைய துணிகளைக் கொடுத்து விடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.