அமெரிக்காவில் ஒரு கார் நிறுவனம், ஆறு மாதத்திற்கு முன்பு 70 லட்ச ரூபாய்க்கு ஒரு கார் தயாரித்தார்கள். அனைத்துமே கம்ப்யூட்டரைஸ்டு வசதிகள் பொருத்தப்பட்ட கார் அது. வெள்ளோட்டம் பார்ப்பதற்காக அந்தக் காரை வெளியில் எடுத்துச் செல்கிறார்கள். இதெல்லாம் உண்மையில் நடந்த சம்பவங்கள்... அதைத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன்... பின்னால் காரில் இருந்து ஒருவன் பேசுகிறான். உன் காரில் இருக்கும் கண்ட்ரோல் என்னிடம் இருக்கிறது என்று. கார் நிறுவனக்காரன் மிரண்டு போனான். ‘ஏய் சும்மா சொல்கிறாயா? என்று பின்னால் வந்த கார்காரனை இவன் மிரட்ட, நீ ஓட்டித்தான் பாரேன் என்று அவன் சவால் விட, இவன் ஓட்டிப் பார்த்தான்... பிரேக் பிடிக்க முடியவில்லை, நினைத்த படி வலது, இடது பக்கம் திருப்ப முடியவில்லை. காரின் இயக்கம் முழுதும் பின்னால் உள்ள கார்க்காரனின் கட்டுப்பாட்டில் இருப்பதை அப்போது தான் இவன் உணர்ந்து கொள்கிறான். வண்டியை நிறுத்த முடியாத அபாயத்தில் அவன் தன்னைக் காப்பாற்றச் சொல்லிக் கதற.. பிறகு பின்னால் வந்த கார்க்காரன் காரை நிறுத்தி அவனைக் காப்பாற்றுகிறான். அப்படிப்பட்டவனை அந்தக் கார் நிறுவனம் 1 மில்லியன் டாலர் சம்பளம் கொடுத்து தன்னிடம் வேலைக்கு வைத்துக் கொண்டது. வேறு வழியில்லை. ஏனென்றால், அவன் எப்படித் திருடினான் என்று தெரியவேண்டும். மீண்டும் இப்படி யாராவது தங்களது காரைத் திருடாமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெரிந்து கொண்டாக வேண்டும். இப்படியெல்லாம் செய்ய முடிகிறது எனும் போது, நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள், மெசெஜ்களைத் திருட முடியாதா?