முருகானந்தத்தின் கண்டுபிடிப்பைப் பாராட்டிய இந்திய அரசு. அவரது சேவை முயற்சியைப் பாராட்டி ‘பத்மஸ்ரீ’ விருதளித்துக் கெளரவித்திருக்கிறது. மேலும் இந்தியாவின் 25 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அவரது நாஃப்கின்களை அரசே கொள்முதல் செய்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமும், கிராம ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலமாகவும் ஏழை, எளிய மகளிரைச் சென்றடைய உதவுகிறது. பாலிவுட்டில் இது பயோ பிக் என்று சொல்லப்படக் கூடிய வாழ்க்கைச் சித்திரங்களின் சீஸன் போல! இந்தி நடிகர், நடிகைகளும் இத்தகைய திரைப்படங்களில் நடிக்கத் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருவது பாராட்டத் தக்கது.