கோவை அன்னபூர்ணா உணவகம் மட்டும் தான் என்றில்லை, சென்னை சரவண பவன் உணவகங்கள், தலப்பா கட்டி உணவகங்கள், கே.எஃப்.சி, இப்படி பிரபலமான உணவகங்கள் திடீர், திடீர் என செய்தியாகி பின்னர் அந்தச் செய்தி வந்த சுவடே இன்றி மறைந்தும் விடுகின்றது. உணவகங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்கள் சரி செய்யப் படுகின்றனவா? என்பதை பின் தொடர்ந்து அறிந்து கொள்ளும் வசதி உண்டா? அப்படி இருப்பின் மேற்கண்டவாறு புகாருக்கு உள்ளான அத்தனை உணவகங்களிலும் இதுவரை நடந்ததென்ன? அவர்கள் தங்கள் மேல் சுமத்தப் பட்ட குற்றத்தை அல்லது பிழையைச் சரி செய்த பின்பு தான் அவர்களுக்கு தொடர்ந்து தங்களது உணவகங்களை நடத்தும் உரிமை அளிக்கப் பட்டிருக்கிறதா? இதையெல்லாம் சாதாரண மக்கள் எப்படி அறிவது?