‘பிக் பாஸ் ஒரு மொக்கை நிகழ்ச்சி, அதில் கலந்து கொண்டவர்கள் யார்? மதர் தெரஸாக்களா? தொழில்முறை நடிகர்கள், தாங்கள் இப்படி, இப்படித்தான் நடிக்கப் போகிறோம் என்று தெளிவாக ஒப்பந்தம் போட்டு, அதற்கான தொகையைப் பெற்றுக் கொண்டு, முன்கூட்டியே எல்லாவற்றையும் முடிவு செய்து கொண்டு தான் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை விமர்சனம் செய்து நேரத்தை வீணடிப்பதை விட, பார்க்கப் பிடிக்காவிட்டால் சேனலை மாற்றி விடுவது இந்தப் பிரச்னையை முடிப்பதற்கு எளிதான வழி என்றார். இந்த நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேசப் பேச அது மேலும், மேலும் மக்களைச் சென்றடையும், யாராலுமே பேசப்படாமல் இருந்தால் சில நாட்களில் அந்த நிகழ்ச்சி தானாகவே நிறுத்தப்பட்டு விடலாம். அதைத்தானே நாம் செய்ய வேண்டும். அதை விட்டு விட்டு, அந்த நிகழ்ச்சியைத் தடை செய்யுங்கள் என்று கோருவதிலும், அதன் தொகுப்பாளரை கைது செய்யுங்கள் என்று சொல்வதிலும் நியாயமில்லை. என்றார் கஸ்தூரி.