ஜம்போலி தான் கருவுற்ற 9 வது வாரத்தில், திடீரென தனக்கு கழுத்து மற்றும் தலைப்பகுதியில் தாங்க முடியாத வலி இருப்பதாகத் தன் கணவரிடம் கூறவே, கணவர் முரியல் படில்ஹோ அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஆனால் அழைத்துச் செல்லும் வழியிலேயே ஜம்போலிக்கு நினைவு தப்பி விட்டது. அங்கே மருத்துவமனையிலோ, ஜம்போலிக்கு மூளையில் ரத்தக் கசிவு இருந்து அதை உரிய நேரத்தில் கண்டுபிடித்து சரியாக சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தவறியதால் இப்போது அவர் மூளைச்சாவு அடைந்து விட்டார் என்று தெரிவித்திருக்கிறார்கள். அதிர வைத்த வைத்த இந்த அறிவிப்பு கண்டு திகைத்துப் போனார் முரியல். அந்த நிமிடத்தில், முரியலை, இறந்து கொண்டிருக்கும் தன் மனைவி குறித்து வருத்தப் படுவதா? அல்லது மனைவியின் வயிற்றுக்குள் இப்போதும் உயிருடன் இருக்கும் தனது இரட்டைக் குழந்தைகளின் அபாயகரமான நிலை குறித்து கவலைப்படுவதா? என்ற பதில் தெரியாத கேள்விகள் குடைந்தெடுக்க; மருத்துவர்களோ; தாய் மூளைச்சாவு அடைந்த நிலையில் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தைகளை மிஞ்சிப் போனால் இன்னும் 3 நாட்களுக்கு வேண்டுமானால் உயிரோடு வைத்துக் கொள்ளப் போராடலாம். பிறகு எல்லாம் கடவுள் செயல் என்றிருக்கிறார்கள். எப்போது கருவிலிருக்கும் குழந்தைகள் தங்களது இதயத் துடிப்பை நிறுத்திக் கொள்கின்றனவோ, அப்போது முரியல் தன் மனைவியின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்று இறுதிக் காரியங்கள் செய்யலாம் என மருத்துவர்கள் கூறியதாக முரியல் தன் வலி மிகுந்த நிமிடங்களைப் பகிர்ந்து கொண்டார்.