படத்தை பார்த்து முடிக்கும் போது மெல்லிய புன்னகை ஓடி மறைகிறது. மனித வாழ்வின் எல்லா விதமான கருத்து மோதல்கள், எண்ண மோதல்களையும் தூசி போல ஊதிப் பறக்க விடத் தேவையான அத்தனை சாய்ஸ்களும் நம் கை மேல் இருக்கின்றன எனும் நம்பிக்கையைத் தருகின்றன இத்தகைய குறும்படங்கள். அந்த சாய்ஸ்களைப் பயன்படுத்திக் கொண்டு பிரச்னைகளைத் தூர விலக்குவது என்றுமே நம் சாய்ஸ் தான். அதை சரியாக உணர்ந்து கொண்டால் போதும் மாமியார், மருமகள் பிரச்னை மட்டுமல்ல, மாமனார், மருமகன் பிரச்சினை, நாத்தனார், ஓரக்கத்திப் பிரச்சினை முதலிய உள்வீட்டுக் குழப்பங்கள் முதல் நிறப் பாகுபாடு, இனப்பாகுபாடு, ஜாதி, மதம் உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டுக் குழப்பங்கள் வரை எல்லாவற்றையும் கடந்து இந்த பரந்த உலகில் சிறகடித்துப் பறப்பது எளிது.