இந்த புத்தகக் கடையின் நிறுவனர் அருண், மென்பொருள் வல்லுனராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அருண், 2013 தமிழ் சினிமாவின் மீதிருந்த மோகத்தால் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு தமிழ் ஸ்டுடியோ எனும் நல்ல சினிமாவுக்கான இயக்கத்தையும், பியூர் சினிமா புத்தகக் கடையையும் துவக்கி நடத்தி வருகிறார். கை நிறைய சம்பளம் பெற்றுத் தரும் நல்ல வேலையை உதறி விட்டு எதற்காக இப்படி ஒரு முடிவு என்றால், அதற்கு அருண் அளிக்கும் பதில், “வேலையை விட்டு விடுவது என்று முடிவெடுத்ததால் எனக்குள் இருந்த கலைஞன் உயிர் பெற்றுள்ளான். தொடர்ந்து அந்த வேலையில் இருந்திருந்தால் கை நிறைய சம்பாதிக்கலாம், ஆனால் கலைஞர்களால் தொடர்ந்து ஒரே வேலையை செய்து கொண்டிருக்க முடியாது. வேலையை விட்டதில் எனக்கொன்றும் பெரிய வருத்தங்கள் இல்லை” என்கிறார். இந்த இயக்கம் மற்றும் புத்தகக் கடை மூலமாக எங்களால் பலரது மனதைத் தொட முடிந்திருக்கிறது. இப்படி ஒரு தாக்கம் ஏற்படுத்த முடிந்தமை குறித்து திருப்தியாகவே உணர்கிறேன்” என்கிறார்.