அனோஷ்கா ரவி ஷங்கரை நினைவிருக்கிறதா? இந்தியாவின் பிரபல சிதார் கலைஞர் பண்டிட் ரவிஷங்கரின் இந்திய மகள். அப்பாவைப் போலவே மகளும் திறமையான சிதார் கலைஞர். அறிமுகமான ஆரம்ப நாட்களிலேயே பல கிராமி அவார்டுகளை வென்று தன் அப்பாவின் பெயரைக் காப்பாற்றிய அனோஷ்கா தற்போது வெளிவரவிருக்கும் தனது புதிய ஆல்பமான “லேண்ட் ஆஃப் கோல்டு” க்காக வரும் டிசம்பரில் இந்தியா வரவிருக்கிறர். தனது இந்தப் பயணத்தில் அனோஷ்கா ஆறு பிரதான இந்திய நகரங்களில் பயணம் செய்யவிருக்கிறார் என்பதால் அவரது இந்தியச் சுற்றுப்பயணத்தை ’ஆறு நகரங்களுக்கான இந்தியச் சுற்றுப் பயணம்’ என்றே குறிப்பிடுகிறார்கள்.
அந்த ஆறு பிரதான இந்திய நகரங்கள் நம்ம சென்னையும் ஒன்று என்றால் அது நமக்குப் பெருமை தானே! சென்னை, மும்பை, புனே, பெங்கலூரு, ஹைதராபாத், புது டெல்லி உல்ளிட்ட ஆறு நகரங்களில் அனோஷ்கா சுற்றுப் பயணம் செய்யவிருக்கிறாராம்.