டெல்லியைச் சேர்ந்த வயதான தம்பதியர் தங்களது வீட்டில் இருந்து கொண்டு தங்களுடன் சுமூகமான உறவைப் பேணாத மகனையும், மருமகளையும் வீட்டை விட்டுக் காலி செய்யுமாறு கூறியுள்ளனர். பெற்றோரின் வேண்டுகோளை மகன் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனையடுத்து இரு தரப்பினரிடையே முடிவின்றித் தொடர்ந்த மனஸ்தாபங்களின் பின் அந்த பெற்றோர் டெல்லி உயர்நீதி மன்றத்தில் ‘தங்களுடன் பேச்சு வார்த்தைகளை முறித்துக் கொண்ட மகனையும், மருமகளையும் தங்களுக்குச் சொந்தமான வீட்டிலிருந்து வெளியேற்றுமாறு கூறி மனு தாக்கல் செய்தனர். பெற்றோரின் மனுவை எதிர்த்து மகனும், மருமகளும் அந்த வீட்டைக் கட்டியதில் பொருளாதார ரீதியாக தங்களது பங்கும் இருப்பதால் தங்களால் வீட்டைக் காலி செய்ய முடியாது என்றும், தங்களையும் அந்த வீட்டின் சம உரிமையாளர்களாகக் கருதி உயர்நீதிமன்றம் அந்த வீட்டில் பங்கிருப்பதாக உத்தரவிட வேண்டும் என்றும் கோரி எதிர் மனு தாக்கல் செய்திருந்தனர்.