தனது தந்தை தனக்காக விட்டுச் சென்ற அறிவுரையாக ப்ரின்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது என்னவெனில், “யாரையும் உடனடியாக நம்பி விடாதே, அவர்கள் சொல்வது நல்ல விசயங்களாகவே தோற்றமளித்தாலும் கூட, உனக்கு அது நல்லதா? கெட்டதா? என்று தீர ஆராய்ந்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். என்பதே என் தந்தை எனக்குச் சொன்ன கடைசி அறிவுரை... மேலும் இன்று என்னுடனும், எனது சகோதரர்களுடனுடம் அறிமுகமில்லாத பலரும் கலந்துரையாடவும் நட்பு கொள்ளவும் விரும்புவதும் கூட தனது அப்பாவின் புகழால் தானே தவிர, எங்களை எங்களுக்காக யாரும் அடையாளம் காணவோ, அங்கீகரிக்கவோ இல்லை” என்பதையும் தான் உணர்ந்தே இருப்பதாக ப்ரின்ஸ் தெரிவித்துள்ளார்.