சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

அப்பாவைப் போல பாப் ஸ்டாராக விருப்பமில்லை: மைக்கேல் ஜாக்ஸன் மகன் ப்ரின்ஸ் அறிவிப்பு! 

அப்பாவிடம் தான் முன்பே தெரிவித்ததைப் போல் இயக்கம் மற்றும் தயாரிப்பு வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எதிர்பார்ப்புக்கு இணங்க அப்பாவைப் போல ஒரு பாப். ஸ்டாராக விர

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:38 pm

கார்த்திகா வாசுதேவன்

மறைந்த பாப் ஸ்டார் மைக்கேல் ஜாக்ஸன் மகன் ப்ரின்ஸ், தன் தந்தையைப் போல தானும் ஒரு பாப் ஸ்டாராக வேண்டும் என்று தன்னைச் சுற்றியுள்ள நண்பர்கள் விரும்பினாலும் தனக்கு அதில் விருப்பமில்லை என்று லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் பத்திரிகை பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். பாட்டு, நடனம் போன்ற துறைகளை விட தனக்கு எப்போதும் இயக்கம், தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் தான் அதிக ஆர்வமிருக்கிறது என்றும், தனது இந்த ஆர்வம் மறைந்த தன் தந்தை ஜாக்ஸனுக்கும் முன்பே தெரியும் எனறும் அவர் குறிப்பிட்டார். 19 வயது ப்ரின்ஸின் இந்த தீர்க்கமான முடிவு மூன் வாக் புகழ் ஜாக்ஸன் ரசிகர்களுக்கு வேண்டுமானால் சற்று ஏமாற்றம் தரலாம். ஆனால் ப்ரின்ஸ் தனக்கு என்ன் தேவை என்பதில் தெளிவாகவே இருக்கிறார்.

2009 ஆம் வருடம் கடுமையான புரொப்பொஃபோல் மற்றும் பென்ஸோடையாஸெபைன் போதைப் பொருள் உட்கொண்டதால் ஏற்பட்ட நச்சால் மைக்கேல் ஜாக்ஸன் இறந்த பின் ப்ரின்ஸ் தன் தந்தையின் வழிகாட்டுதலை இழந்து விட்டார். தந்தை இறந்தாலும் அவர் தங்களோடு வாழ்ந்த காலத்தில் தங்களுக்காக அவர் கூறிய அறிவுரைகளை தான் எப்போதும் மறந்ததே இல்லை என ப்ரின்ஸ் தெரிவித்துள்ளார்.

தனது தந்தை தனக்காக விட்டுச் சென்ற அறிவுரையாக ப்ரின்ஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தது என்னவெனில், “யாரையும் உடனடியாக நம்பி விடாதே, அவர்கள் சொல்வது நல்ல விசயங்களாகவே தோற்றமளித்தாலும் கூட, உனக்கு அது நல்லதா? கெட்டதா? என்று தீர ஆராய்ந்தே எந்த முடிவையும் எடுக்க வேண்டும். என்பதே என் தந்தை எனக்குச் சொன்ன கடைசி அறிவுரை... மேலும் இன்று என்னுடனும், எனது சகோதரர்களுடனுடம் அறிமுகமில்லாத பலரும் கலந்துரையாடவும் நட்பு கொள்ளவும் விரும்புவதும் கூட தனது அப்பாவின் புகழால் தானே தவிர, எங்களை எங்களுக்காக யாரும் அடையாளம் காணவோ, அங்கீகரிக்கவோ இல்லை” என்பதையும் தான் உணர்ந்தே இருப்பதாக ப்ரின்ஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் தனது அப்பாவிடம் தான் முன்பே தெரிவித்ததைப் போல் இயக்கம் மற்றும் தயாரிப்பு வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தப் போவதாகவும் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் எதிர்பார்ப்புக்கு இணங்க அப்பாவைப் போல ஒரு பாப் ஸ்டாராக விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.