இந்த மந்திரத்தை நாம் எல்லோருமே பின்பற்றினால் நன்மை நமக்குத்தான். சிலர் கொள்கை ரீதியிலான அரசியல் கருத்து வேறுபாடுகளை மனதில் கொண்டு மத்திய அரசின் சில நல்ல முன்னெடுப்புகளைக் கூடப் புறக்கணித்து விடுகிறார்கள். அதிலொன்று தான் இதுவும். ஆனால், அதிகாரிகளில் சிலர், மக்கள் அவ்விதமாக நல்ல விஷயங்களையும் கூட புறக்கணித்து விடக்கூடாது என்பதற்காக, அரசின் நலத்திட்டங்களையும், நேர்மையான சில முன்னெடுப்புகளையும் தங்களது வாழ்க்கை முறையில் செய்து காட்டி அதன் மூலமாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வது பாரட்டத்தக்கது.