தன்னுடைய வித்தியாசமான பழக்கம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டால், அவர்கள், எப்போதாவது நீங்கள் பெரிய கண்ணாடித் துண்டு ஒன்றை சாப்பிட்டு விட்டீர்கள் என்றால் நிச்சயம் அது உங்களது குடலைப் பாதிக்கும் என எச்சரித்தார்கள். அந்த எச்சரிக்கையை ஏற்று இப்போதெல்லாம் அடிக்கடி கண்ணாடி சாப்பிடுவதில்லை என்ற போதும் எப்போதாவது எனக்குப் பிடித்தமான கண்ணாடி கிடைத்தால் அதை விட்டு விடவே கூடாது என்று நினைத்து அவ்வப்போது கண்ணாடி சாப்பிட்டுக் கொண்டு தான் இருக்கிறேன். என்கிறார் கூலாக. சாஹூவைப் பொருத்தவரை அவருக்கு கண்ணாடி என்பது நாம் தினமும் சாப்பிடும் காய்கறி பழங்களைப் போல ருசி மிக்க உணவாகத்தான் தென்படுகிறது என்கிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் அசைவ உணவுப் பழக்கம், சிகரெட் பழக்கம், பீர் மற்றும் இதர போதை வஸ்துக்களைப் போல இந்தக் கண்ணாடி சாப்பிடும் வினோதப் பழக்கம் தன்னை மிகவும் அடிமைப்படுத்தி விட்டது, இனி அதிலிருந்து மீள்வது கஷ்டம் என்று கூட சொல்லிக் கொள்கிறார் சாஹூ!