இதனால் மிகுந்த மன வருத்தமும், கோபமும் அடைந்த பரம் சாகிப், We Qutub உணவகம் குறித்த தனது வருத்தத்தையும், கண்டனங்களையும் சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தார். இவரது கண்டனப் பதிவுக்குப் பின்பு அதே உணவகத்தைப் பற்றி மேலும் பலரும் கூட இதே விதமான குறைகளைக் கூறத் தொடங்கினர். அதைத் தொடர்ந்து இந்தச் செய்து காட்டுத்தீ போல பரவத் தொடங்க, தங்கள் உணவகத்துக்கு கிடைத்து வரும் இந்த எதிர்மறை பப்ளிசிட்டியைக் கண்டு துணுக்குற்ற We Qutub உணவக உரிமையாளர்கள் தரப்பு, பரம் சாஹிப்பிடம் தங்களது தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டது. ஆயினும், தற்போது பரம் சாகிப், அவர்களை மன்னிப்பதாக இல்லை.