யூடியூபர் மைக்கேல் பென்னட் இந்த வார ஆரம்பத்தில் ஒரு விடியோவை வெளியிட்டிருந்தார். 15 மாதங்களுக்கு முன் தெற்கு கரோலினாவின் எடிஸ்டா ஆற்றுக்கடியில் தொலைந்து போன ஐபோன் ஒன்றைத் தாம் இப்போது கண்டெடுத்திருப்பதாகவும், ஆற்றுக்கடியில் நீருக்குள் மூழ்கி சேற்றில் சிக்கி இத்தனை மாதங்கள் கடந்த பின்பும் அது இன்னும் வேலை செய்யும் நிலையில் இருப்பதை அவர் ஆச்சர்யத்துடன் அந்த விடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்வை ஒட்டி WDAM எனும் உள்ளூர் சேனல் ஒன்றுக்கு அவரளித்த நேர்காணலில், ஐபோனின் உரிமையாளரைக் கண்டறிவது கடினமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஏனெனில், அந்த ஐபோன் அந்நியர்கள் கையில் சிக்குகையில் கடவுச் சொல்லிட்டு உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாக்கப்பட்டிருந்தது. எனவே அந்த ஐபோனைக் கிண்டி அதன் உரிமையாளரைக் கண்டுபிடிக்க அந்த முறை கை கொடுக்கவில்லை. எனவே அதிலிருந்த சிம் கார்டை நீக்கி வேறொரு ஐபோனில் இயக்கி அதன் மூலமாக அதன் உரிமையாளர் குறித்த தகவல்களைக் கண்டுபிடித்தார் பென்னெட்.