நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டின் எதிரில் ஒரு அம்மாள் இருந்தார். வயது 48 லிருந்து 50 க்குள் இருக்கலாம். பக்கத்து வீட்டுச் சின்ன வாண்டு, அவனுக்கு 2 வயது தான்... அவன், இந்த அம்மாளை ஒருமுறை ‘பாட்டி’ என அழைத்து விட்டான். அவ்வளவு தான், அந்தம்மாள் பொங்கி எழாத குறை! ‘ஏய், என்ன, என்னைப் போய் பாட்டின்னு சொல்ற? நான் இன்னும் எம்பொண்ணைக் கட்டிக் கொடுக்கல, அவளுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்து அது என்னைப் பாட்டின்னு கூப்பிடற வரைக்கும் நான் ஆண்ட்டியாவே இருக்கேன் டா.. இனிமே பாட்டின்னு கூப்பிட்டா உதைப்பேன் உன்னை. ஆண்ட்டின்னு தான் சொல்லனும் என்ன புரியுதா?’ என்று கோபத்தில் முகம் சிவந்தார்.