காபூலில் போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் விதத்தில் மர்குபா சஃபி என்ற பெண்மணி, போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின்
அலுவலகத்தின் (UNODC) உதவியுடன் நறுமண சோப் தயாரிக்கும் சிறு தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கி இருக்கிறார். சஃபிக்குச் சொந்தமான புறநகர் தோட்டமொன்றில் இந்த தொழிற்சாலை தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சஃபியின் இந்த முயற்சிக்கு உதவும் விதத்தில் UNODC தானே செலவை ஏற்றுக் கொண்டு சஃபியை இந்தியாவுக்கு அனுப்பி இங்கே பெண்களுக்கான சிறு தொழில் நிறுவனங்கள் எவ்விதம் செயல்படுகின்றன என்பதற்கான பயிற்சியைப் பெற்று வருமாறு அனுப்பி வைத்தது. ஆக.. போதைப் பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் சோப் தொழிற்சாலையை ஆஃப்கன் அரசு உதவியுடன் தொடங்கி தற்போது நடத்தி வருகிறார் மர்குபா சஃபி.
போதைப் பழக்கத்திற்கு அடிமையான பெண்களை அவர்களது குடும்பத்தினரே ஏற்றுக் கொள்ளாத நிலையில் அத்தகைய பெண்கள், தங்களது வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார்கள்? கைவிடப்பட்டவர்களாகவும், முற்றிலும் நிராகரிக்கப்பட்டவர்களாகவும் கருதப்படும் அந்தப் பெண்களை மறுவாழ்வு பெறச் செய்ய எந்த தேவதூதர்கள் வரப்போகிறார்கள்? அவர்களை வாழ வைக்க நல்லிதயம் படைத்தவர்கள் எவரேனும் வந்தால் தான் அவர்களும் இந்த உலகில் வாழ முடியும். அவர்களை குடும்பத்தைச் சேர்ந்தவர்களே அந்நியப்படுத்தும் போது.. அவர்களுக்கான பாதுகாப்பான வாழ்வை முன்னிலைப்படுத்த வேண்டியது யார்? மர்குபா சஃபி போல யாராவது புறப்பட்டு வந்தால் தான் உண்டு.
இந்த விஷயத்தில் இந்தியர்களான நமக்கு ஒரு சின்ன ஆறுதல்.. இந்தியாவில் இயங்கி வரும் கைவிடப்பட்ட பெண்களுக்கான சிறு தொழில் வாய்ப்பு நிறுவனங்களை ஆதர்சமாகக் கொண்டும் அவர்களைப் பின்பற்றியும் ஆஃப்கனில் நறுமண சோப் தொழிற்சாலையை போதைக்கு அடிமையான பெண்களுக்கு மறுவாழ்வளிக்கும் நோக்கில் தாம் ஏற்று நடத்தி வருவதாகத் தெரிவித்திருப்பது.
இதை நிச்சயம் பாராட்டலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

ஹோர்முஸ் நீரிணையில் சிறிய படகுகள்கூட தயக்கமின்றி சுட்டு வீழ்த்தப்படும்: அமெரிக்க கடற்படைக்கு டிரம்ப் உத்தரவு

"ஆடிப்பாடி அல்ல...! அறிவைப் பயன்படுத்தி வாக்களியுங்கள்!" இயக்குநர் மாரி செல்வராஜ்

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


