தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

உங்களுக்கு தமிழ் மேல் தீராக்காதலா? அப்படியென்றால் இந்தப் பழமொழிகளுக்கு அர்த்தம் சொல்லுங்களேன்!

கீழே 10 பழமொழிகளைத் தந்திருக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் . அந்தப் பழமொழிகளை வாசித்து அவற்றுக்கான அர்த்தத்தை எழுதி உங்களது பெயர், முகவரியை எழுதி உங்களது புகைப்படத்தையும் இணைந்து எங்களுக்கு

News image
Updated On :6 ஜூலை 2019, 10:15 am

அன்பான தினமணி வாசகர்களே!

உங்களில் எத்தனை பேருக்கு பழமொழிகளின் மீது ஆர்வம் இருக்கிறது? பழமொழி சொல்லியே சாகடிக்கும் அம்மாக்கள்,  பாட்டிகள் மற்றும் அத்தைகளினூடாக வாழ்ந்து வந்த சமுதாயம் நம்முடையது. நம் சமூகத்தில் ஆண்களும் கூட பழமொழிகள் சொல்லியதுண்டு. எல்லாம் கடந்த தலைமுறையினரோடு முடிந்து விட்டதோ எனும் படியாக இன்று தமிழ் பழமொழிகளை தங்களது பேச்சினூடே புழங்குவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. விட்டால் இன்னும் சில காலங்களில் பழமொழியா? அப்படின்னா என்ன? என்று கேட்போர் பெருகி விடுவார்கள் போலிருக்கிறது. எனவே தான் இப்படி ஒரு போட்டி வைத்தால் என்ன என்று தோன்றியது. 

கீழே 10 பழமொழிகளைத் தந்திருக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் . அந்தப் பழமொழிகளை வாசித்து அவற்றுக்கான அர்த்தத்தை எழுதி உங்களது பெயர், முகவரியை எழுதி உங்களது புகைப்படத்தையும் இணைந்து எங்களுக்கு அனுப்ப வேண்டியது தான்,

செய்வீர்களா?

பழந்தழிழ் பழமொழி இன்பம்...

1. பட்டும் பாழ், நட்டும் சாவி.
2. கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக
3. கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.
4. மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்.
5. முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?
6. பார்க்கக்கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
7. கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான்.
8. சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.
9. வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்.
10. நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.

முழுமையாக 10 பழமொழிகளுக்கும் சிறப்புர தெளிவான அர்த்தங்களை எழுதி அனுப்பும் வாசகர்களின் பதில்கள் அவர்களது புகைப்படத்துடன் தினமணி.காமில் வெளியிடப்படும்.

பழமொழிகளுக்கான அர்த்தங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி dinamani.readers@gmail.com

பதில்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 11.7.19 

சிறந்த பதில்கள் வரும் வெள்ளியன்று காலை 11 மணியளவில் தினமணி.காமில் வெளியாகும்.

தினமணி வாசகர்களில் எத்தனை பேருக்கு தமிழ் பழமொழிகளின் மேல் பற்று உண்டு என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் 

தினமணி இணையதளக்குழு.
 

Related Article

பாட்டில் சேலஞ்சை அடுத்து டிக் டாக்கில் களை கட்டும் சைக்கிளோ சைக்கிள் சேலஞ்ச்!

நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டிய புறநானூற்றுப் பாடலின் பொருள்!

’ஆபாசமாகப் பாடம் எடுக்கும் பேராசிரியரைக் கெரோசின் ஊற்றி எரிப்போம்’: மிரட்டும் கல்லூரி மாணவர்கள்!

ஃபுட்பால் விளையாடிய பசுமாடு... வைரல் விடியோ!

‘நாய் கடிச்சா, கடிச்ச நாயைத் நீங்க திரும்பக் கடிங்க’ நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வந்த பெண்ணிடம் நக்கலடித்த அரசு மருத்துவர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.