1. பட்டும் பாழ், நட்டும் சாவி.
2. கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக
3. கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.
4. மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்.
5. முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?
6. பார்க்கக்கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
7. கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான்.
8. சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.
9. வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்.
10. நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.