அஜ்மீரில் பெண்ணொருவர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு அப்போது பணியில் இருந்த அரசு மருத்துவர் பிரவீன்குமார் பலோசியா, அந்தப் பெண்ணுக்கு நாய்க்கடிக்கு சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, ‘நாய்க்கடித்து விட்டதா, அப்படியானால் எந்த நாய் உங்களைக் கடித்ததோ, அந்த நாயைத் தேடிச் சென்று நீங்கள் திரும்பக் கடித்து விடுங்கள்’ என்று பதில் அளித்திருக்கிறார். இதனால் மிகுந்த கோபத்திற்கு உள்ளான அந்தப் பெண்மணி சம்மந்தப் பட்ட மருத்துவரை சரமாரியாகத் திட்டத் தொடங்க, கோபமடைந்த மருத்துவர் சிகிச்சை பெற வந்த பெண்ணின் மீது எஸ் எஸ்டி பிரிவினருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையில் புகார் அளிக்கும் நிலைக்குச் சென்றார்.