சண்டீகர் நுகர்வோர் நீதிமன்றத்தில் கஸ்டமர் ஒருவர் ‘பாட்டா’ நிறுவனத்தின் மீது ஒரு புகாரைப் பதிவு செய்திருந்தார். சமீபத்தில் பாட்டா கடைக்குச் சென்று அவர் ஷூ ஒன்றைப் பர்சேஸ் செய்திருக்கிறார். ஷூ வாங்கிய பின் பில்லிங் கவுண்ட்டர் சென்ற போது பாட்டா நிறுவனம் பொருட்களைப் பொதிந்து தந்த பைக்கும் சேர்த்து தன்னிடம் காசு வசூலித்து விட்டது. இதெல்லாம் அராஜகம், நான் எதற்கு பைக்கும் சேர்த்து காசு தரவேண்டும், அதிலும் அந்தப் பையில் பாட்டா செருப்புகள் மற்றும் இதர தயாரிப்புகளுக்கான விளம்பரம் வேறு அச்சிடப்பட்டிருந்தது. தங்களது நிறுவனத் தயாரிப்புகளை விளம்பரப் படுத்திக் கொள்ளும் பொருட்டு பாட்டா தயாரித்த பை அது. அதை கஸ்டமர் தலையில் கட்டும் போது அதற்கும் சேர்த்து காசு வாங்கி விட்டார்கள். இதை நாம் சும்மா விட முடியாது, அதனால் தான் நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறேன்’ என்றார் அவர்.