25 வயது இஷ்தியாக் அலி டெல்லி, உத்தம் நகரில் இயங்கி வரும் எக்ஸ்போர்ட் நிறுவனம் ஒன்றில் டிசைனராகப் பணிபுரிந்து வருகிறார். ஸ்மார்ட் ஃபோனின் டேட்டிங் செயலி ஒன்றின் மூலம் ஆயூஷுக்கும், இஷ்தியாக் அலிக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இருவருக்குள்ளும் நட்புறவில் ஏற்பட்ட தகராறில் சம்பவ தினத்தன்று இஷ்தியாக் அலி ஆயுஷை சுத்தியலால் தலையில் அடித்துக் கொன்றிருக்கிறார். கொன்ற பின் சடலத்தை மறைக்கத் தான் பணம் கேட்டு மிரட்டி நாடகமாடியிருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. ஆயுஷுக்கும், இஷ்தியாக் அலிக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கொலை வரை செல்லத் தூண்டிய காரணங்கள் எவையென தற்போது காவல்துறை விசாரித்து வருகிறது. கொலையான ஆயூஷுக்கு தொடர்ந்து டேட்டிங் செயலிகளைப் பயன்படுத்தும் பழக்கம் இருந்திருக்கிறது. இணையத்தில் புதிது, புதிதாக அறிமுகமாகும் டேட்டிங் செயலிகள் அனைத்தையும் பயன்படுத்திப் பார்க்கும் ஆர்வம் ஆயுஷுக்கு இருந்திருக்கிறது. இதை அவர் தனது குடும்பத்தினர் அறியாத வண்ணம் ரகசியம் காத்திருக்கிறார்.