தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கேரளாவின் பாரம்பர்யப் பெருமை மிக்க  ‘அரக்கல் அரசி’ ஆயிஷா பீவி மரணம்!

அரக்கல் ராஜ்ஜியத்தின் 37 வது அரசியாகக் கருதப்படும் அரக்கல் பீவி 2006 ஆம் ஆண்டில் செப்டம்பர் 17 ல் அரக்கல் அரசியாகப் பதவியேற்றார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 10:04 am

RKV

அரக்கல் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரும், அக்குடும்பத்தின் தலைவருமான அரக்கல் பீவி இன்று காலமானார். வயோதிகத்தின் காரணமாக மரணம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அவர் தனது பூர்வீக அரச இல்லமான தலசேரி, சிரக்காரா ராயல் ஹவுஸில் காலமானார். அவருக்கு வயது 93. அரசிக்கு நான்கு பிள்ளைகள். சஹீதா, சாதிக், முகமது ராஃபி மற்றும் சம்சீர். ஆயிஷா பீவியின் கணவர் சி ஒ மொய்து கேயி மற்றும் அவருடைய மகன்களில் ஒருவருமான ராஃபி இருவரும் முன்பே காலமாகி விட்டனர். அரக்கல் ராஜ்ஜியத்தின் 37 வது அரசியாகக் கருதப்படும் அரக்கல் பீவி 2006 ஆம் ஆண்டில் செப்டம்பர் 17 ல் அரக்கல் அரசியாகப் பதவியேற்றார். அவருக்கு முன்னதாக அரக்கல் அரசியாக இருந்தவர் சுல்தானா அயிஷா அலிராஜா. ஆயிஷா பீவியின் இறுதிச் சடங்குகள் தலசேரி ஒடதில் மசூதியில் முழு மாநில அரசு மரியாதையுடன் நடைபெறும் என அரண்மனை வட்டாரம் தெரிவித்திருக்கிறது. இவரது மரணத்தைத் தொடர்ந்து இவரையடுத்த தங்கையான அதிரஜா ஃபாத்திமா முத்து பீவி அடுத்த அரசியாக அறிவிக்கப்படுவார் எனத் தெரிகிறது.

அரக்கல் அரச குடும்பம் கேரளாவில் உள்ள பாரம்பரியம் மிக்க இஸ்லாமிய அரச குடும்பங்களில் தாய்வழிச் சொத்துரிமையைப் பின்பற்றும் அரச குடும்பங்களில் முதன்மையானது. இக்குடும்பங்களில் வயதில் மூத்த நபரே அரசியாகக் கருதப்படுவார். கேரளாவின் கண்ணூர் நகரமும், லட்சத்தீவின் தெற்குப் பகுதியும் இவர்களது அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை. அரக்கல் நகர், மலபார் கடற்கரைப் பகுதியின் தலைநகராக இருந்தது. இவர்களில் பட்டத்திற்கு வரும் அரசர் அலிராஜா எனவும் அரசி அரக்கல் பீவி எனவும் அழைக்கப்படுவது வழக்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.