எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

நீங்கள் செல்ஃபோனை அடிக்கடி கீழே போடுபவரா? இது உங்களுக்குத்தான்!

அதி நவீன ஸ்மார்ட் போன்களை வாங்கும் போது செலுத்தும் கவனத்தை விட, அதைப் பாதுகாப்பதில் தான்

News image
Updated On :10 ஜூலை 2018, 7:06 am

அதி நவீன ஸ்மார்ட் போன்களை வாங்கும் போது செலுத்தும் கவனத்தை விட, அதைப் பாதுகாப்பதில் தான் அதன் பயன்பாட்டாளர்களுக்கு அதிக கவலை என்றே கூறலாம். ஸ்மார்ட் போன்களின் அதிக விலையே இதற்கு காரணம்.

அதுவும் கை தவறி கீழே விழுந்துவிட்டால், பாதுகாப்பு கவசம் இருந்தாலும் போன்களின் ஸ்கிரீன் உடைந்து விடுகிறது. அப்படி உடைந்த போனை பழுது பார்ப்பதற்கு பதில் புதிய போனையே வாங்கிவிடலாம். பழுது பார்க்கும் கட்டணமும், மாற்றுப் பொருளின் விலையும் அவ்வளவு அதிகம்.

கார்களில் விபத்து ஏற்பட்டால் விலை மதிப்பில்லாத உயிர்களைக் காக்க அமைக்கப்பட்டுள்ள ஏர்பேக்குகளைப் போல் ஸ்மார்ட் போன்களில் கொண்டு வர பல ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஏன், சிலர் ஜெட் வேகத்தில் செயல்படும் சிறு மோட்டார்களைப் பயன்படுத்தி முயற்சிகள் மேற்கொண்டனர். இவை அனைத்தும் தோல்வியில்தான் முடிந்தன.

ஆனால், ஜெர்மனியைச் சேர்ந்த ஆலேன் பல்கலைக்கழக மாணவர் பிலீப் ஃபிரன்செலின் 'ஏடி கேஸ்' எனும் புதிய பாதுகாப்புக் கவசத்தைக் கண்டுபிடித்துள்ளார். சாதாரண பாதுகாப்புக் கவசத்தைப்போல் காட்சியளிக்கும் இந்த 'ஏடி கேஸ்'-இல் பொருத்தப்பட்டுள்ள சென்சார்கள், ஸ்மார்ட்போன் கீழே விழுவதற்கு முன்பு, தனது நான்கு கால்களை தானாக விரித்து எந்த விதப் பாதிப்புமின்றி பாதுகாத்துவிடுகிறது.

'மெட்டல் ஸ்பிரிங்குகள்' வைத்து 'ஏடி கேஸை’ அவர் உருவாக்கியுள்ளார். கீழே விழுந்து விரிந்த இந்த மெட்டல் ஸ்பிரிங் கால்களை மீண்டும் உள்ளே மடித்து விட்டு வழக்கம் போல் பயன்படுத்தலாம்.

மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் குறைவான விலையில் உருவாக்கப்பட்டுள்ளது, இந்த 'ஏடி கேஸ்'ஸின் மற்றொரு சிறப்பம்சமாகும். இந்தக் கண்டுபிடிப்புக்காக பிலீப்புக்கு ஜெர்மன் மெக்டிரானிக்ஸ் அமைப்பு தேசிய விருது வழங்கியுள்ளது. தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமைக்கு பதிவு செய்துள்ள பிலீப், தனது நண்பருடன் சேர்ந்து 'ஏடி கேஸ்'ஸை இன்னும் சில தினங்களில் சந்தைப்படுத்த உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.