பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

உங்கள் குலதெய்வம் எதுவென்று தெரியவில்லையா? கண்டுபிடிக்க இதோ ஒரு வழிமுறை!

குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தம் வாழ்க்கையில் நிச்சயம் கடைபிடிக்க

News image
Updated On :1 பிப்ரவரி 2018, 12:37 pm

குலதெய்வ வழிபாடு என்பது ஒவ்வொருவருக்கும் தம் வாழ்க்கையில் நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய ஒரு வழிபாடாகும். நம்முடைய முன்னோர்களை போற்றி, நினைக்கும் விதமாக அவ்வப்போது அவர்களை தரிசிப்பதே நாம் அவர்களுக்கு காட்டும் நன்றிக்கடனாகும். நல்லெண்ணங்கள் தான் நம்மை வாழ வைக்கும், வாழையடி வாழையாக நம் குலத்தை ஆலம் போல தழைக்க வைக்கும். அதற்கு குல தெய்வ வழிபாடு ஒரு சிறப்பான வழி. 

Story image

உலகம் முழுவதிலும் உள்ள பெரிய கோவில்களுக்கெல்லாம் சென்று எத்தனையோ தெய்வங்களை நீங்கள் வணங்கி வந்தாலும், உங்கள் குடும்பத்துக்குரிய குல தெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே வாழ்வில் சிறக்க முடியும் என்பார்கள் பெரியோர்கள்.

பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரம் குல தெய்வ வழிபாடு செய்ய உகந்த நாள். வைகாசி மாசத்தில் விசாக நட்சத்திரமும் சாஸ்தா என்றழைக்கப்படும் குடும்ப தெய்வத்தை தரிசிக்க நல்ல நாளாகும்.

Story image

குலதெய்வ வழிபாட்டை மறந்துவிட்டால் தீர்க்க முடியாத சிக்கல்களும் மன உளைச்சல்களும் அக்குடும்பத்தை அவ்வப்போது தாக்கும். நம்முடைய குல தெய்வம் எது என்று தெரியவில்லை எனில், பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். குடும்பத்தில் உள்ள முதிய உறவினர் யாரேனும் இத்தகவல் தெரிந்தவராக இருக்கலாம். குல தெய்வம் பற்றிய தகவலைத் தெரிந்து கொள்ள ஒரு வழி உள்ளது. 

Story image

தினமும் அதி காலை பிரம்ம முகூர்த்த வேளையில் அகல் விளக்கை ஏற்றி அந்த விளக்கையே குல தெய்வமாக நினைத்து மனமுருக வேண்டுங்கள். தொடர்ந்து 41 நாட்கள் விளக்கேற்றி வழிபாட்டை செய்து வாருங்கள். சரியாக 90 நாட்களுக்குள் உங்கள் குல தெய்வம் பற்றிய அனைத்துத் தகவல்களும் உங்களுக்கு வந்து சேர்ந்துவிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.