இன்று சில ஊடகங்களில் முக்கியச் செய்தியாக இடம்பெற்றிருந்த செய்தியொன்று, மத்தியச் சுற்றுலாத்துறை அமைச்சரான அல்ஃபோன்ஸ் கண்ணந்தனம் என்பவர் பிரதமர் மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டப்பணிகளை செயல்படுத்தும் அமைச்சர்களில் ஒருவராக, டெல்லி மாநகரில் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளார். எப்படித் தெரியுமா? அவருடன் இணைந்து தூய்மைப் பணியில் ஈடுபட்ட துப்புறவு ஊழியர்களெல்லாம் கைகளில் பாதுகாப்பு உறை மாட்டிக் கொண்டு துப்புறவுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்க மத்திய அமைச்சர் மாத்திரம் வெறும் கைகளாலேயே புகையிலைக் கறை படிந்த சுவர்களைச் சுத்தம் செய்யத் தொடங்கி விட்டாராம். இது அங்கிருந்த மக்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது என சில நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது. இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது?!