ஹாரிகாவுக்கும், ருஷி குமாருக்கும் திருமணமாகி 2 வருடங்களான நிலையில், ருஷி குமார், தன் மனைவி ஹாரிகாவை, எம் பி பி எஸ் அட்மிஷன் பெற முடியாத காரணத்திற்காக தினமும் தொடர்ந்து சித்ரவதை செய்து வந்திருக்கிறார். இந்த ஆண்டு ஹாரிகாவுக்கு பி டி எஸ் படிக்க இடம் கிடைத்த போதும், அதில் திருப்தி அடையாத ருஷி குமார். எம் பி பி எஸ் அட்மிஷன் தான் கிடைக்கவில்லையே, அதனால் அதற்கு ஈடாக மேலும் வரதட்சிணையாவது பெற்றுத் தருமாறு ஹாரிகாவைத் தொடர்ந்து தொந்திரவு செய்து வந்துள்ளார். அதன் உச்சகட்டமாகத் தான், மகளை, அவளது கணவரே, கெரோசின் ஊற்றி எரித்துக் கொன்று விட்டு இப்போது தற்கொலை என்று நாடகமாடுகிறார். என் ஹாரிகாவின் தாயார் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.