ரயில்வே போலீஸார் கூற்றுப்படி, ஓடும் ரயில் பெட்டியில் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற யாரும் முன்வராத காரணத்தால், ரயில், சிங்கராயன்பேட்டை ரயில் நிலையத்தை தாண்டியதும், அந்த மூவரும் தன்னைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற பயத்தில், அவர்களிடமிருந்து தப்பும் நோக்கில், அந்த இளம்பெண் ரயிலில் இருந்து குதித்திருக்கிறார். கீழே குதித்த வேகத்தில், கடுமையான காயங்களுடன் அங்கிருந்தவர்களால் உடனடியாக மீட்கப் பட்ட அந்தப் பெண் ஓங்கோல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுத் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். உடலில் காயங்கள் அதிகமிருந்த போதும், அந்தப் பெண்ணின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.