சோஷியல் மீடியாக்களில் தமது கருத்துகளைச் சுதந்திரமாகவும், சூடாகவும் பதிவு செய்து அவ்வப்போது நிலவரத்தைக் கலவரமாக மாற்றக் கூடிய பிரபலங்களுக்கு இந்தியாவில் பஞ்சமே இல்லை. இவர்களில் சிலரது ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவுகளும், கருத்துகளும் மிகவும் சுவாரஸ்யமானவை. அவர்களில் ஒருவர் தான் முன்னால் உச்சநீதி மன்ற நீதிபதிகளில் ஒருவரான மார்கண்டேய கட்ஜூ. ஊரே பாகுபலி திரைப்பட வசூலையும், படத்தையும் பற்றி சிலாகித்துப் பேசிக் கொண்டிருக்க மார்கண்டேய கட்ஜூ மட்டும் கருத்து ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்து விடுவாரா என்ன?