இப்போது விசயம் அதுவல்ல, தமிழகம் மட்டுமல்ல வட இந்தியாவிலும் கூட இப்படியான ஒரு குற்றச்சாட்டு முறையை பிரிட்டிஷார் கையாண்டிருக்கின்றனர். வட இந்தியாவில் நிகழ்ந்த குற்றப் பரம்பரை வரலாற்றை ஆவணப் படுத்தி எழுதப்பட்டது தான் ‘கன்ஃபெஷன்ஸ் ஆஃப் ஏ தக்’ கதை. பிரிட்டிஷ் ஆட்சியில் வட இந்தியாவில் கொள்ளைக்காரர்களாக, கொலைக்காரர்களாக சித்தரிக்கப் பட்டவர்களைப் பற்றியதான இந்தக் கதையில் அமீர்கான் கொள்ளைக்கார நாயகனாக நடிக்கவிருக்கிறாராம். கொள்ளைக் கூட்டத் தலைவனாக நடிக்கவிருப்பது ‘பிக் பி’ அமிதாப் பச்சன். வரலாற்றை ஆவணப் படுத்தும் வகையிலான லகான், டங்கல், அமீர்கானின் முந்தைய படங்கள் எப்போதுமே அதிரடி வெற்றிகளை அள்ளிக்குவித்தவை. என்பதோடு அமீர்கானின் ‘டங்கல்’ தமிநாட்டில் ஏற்படுத்திய அதிர்வு இன்னும் ஓயவில்லை. மக்கள் குடும்பம், குடும்பமாகச் சென்று அந்தப் படத்தை பார்த்தார்கள். இந்திய அளவில் படத்திற்கு பெயரளவுக்கு மட்டுமல்ல வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி கிடைத்தது. அப்படிப் பட்ட அருமையான திரைக்கதை அமைப்புடன் அமீர்கான் குற்றப் பரம்பரை கதையில் நடித்து அது தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உலகளாவிய பாராட்டுகளைக் குவிக்கும் முன்பாகவாவது, நமது தமிழ் இயக்குனர்கள் தங்களது பகையை மறந்து குற்றப் பரம்பரை குறித்த நமது தமிழக வரலாற்றை திரைப்படமாக பதிவு செய்து முடிப்பார்களா? எனத் தெரியவில்லை.