தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தங்களுக்கு நேரும் அவலங்களை வெளிப்படையாக தெரிவிக்க மறுக்கும் பெண்களிடையே  அன்னபூர்ணா ஒரு ஆச்சரியமே!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன்னை பேருந்து நிலையக் காவல்பணியில் ஈடுபட்டிருந்த ஆண் காவலர்கள் சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தியதாக

News image
Updated On :11 ஜனவரி 2017, 9:22 am

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன்னை பேருந்து நிலையக் காவல்பணியில் ஈடுபட்டிருந்த ஆண் காவலர்கள் சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தியதாக  புகார் அளித்து பெங்களூரைச் சேர்ந்த ஆய்வு மாணவியான அன்னபூர்ணா இரு தினங்களுக்கு முன் ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானார். மாணவி அன்னபூர்ணா, அச்சமயத்தில் அங்கு செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இது குறித்து நேரடியாகப் புகார் தெரிவித்திருந்தார். அமைச்சரிடம் மட்டுமல்ல அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடமும் அன்னபூர்ணா, தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஆவேசத்துடன் கண்ணீர் மல்க விளக்கமாகப் புகார் அளித்தார். 

மேலும் அமைச்சர் விஜய பாஸ்கர் அறிவுறுத்தலின் படி கோயம்பேடு பேருந்து நிலைய காவல் நிலையத்திலும் அன்னபூர்ணா புகார் அளித்திருந்தார். அமைச்சரே நேரடியாகத் தலையிட்டிருந்தாலும் இரண்டு தினங்களாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த அன்னபூர்ணாவின் புகாரைப் பற்றி ஊடகங்கள் மூலமாக அறிந்த 
மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததோடு, மாணவியின் புகார் குறித்து உரிய விளக்கம் அளிக்கும் படியும் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. உதவி ஆணையர் நிலைக்கு குறையாத அதிகாரம் உள்ள அதிகாரி ஒருவர் மூலம் விசாரணை நடத்தி 8 வாரத்துக்குள் இந்த வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

மாணவியின் கண்ணீர் மல்கும் புகார் குறித்த யூ டியூப் விடியோ இணைப்பு காண ...

video courtsy: you tube, thanthi tv.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.