சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உடல்நலக்குறைவால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த தன்னை பேருந்து நிலையக் காவல்பணியில் ஈடுபட்டிருந்த ஆண் காவலர்கள் சந்தேகத்தின் பேரில் துன்புறுத்தியதாக புகார் அளித்து பெங்களூரைச் சேர்ந்த ஆய்வு மாணவியான அன்னபூர்ணா இரு தினங்களுக்கு முன் ஊடகங்களில் பரபரப்புச் செய்தியானார். மாணவி அன்னபூர்ணா, அச்சமயத்தில் அங்கு செய்தியாளர்களுடன் பேசிக்கொண்டிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இது குறித்து நேரடியாகப் புகார் தெரிவித்திருந்தார். அமைச்சரிடம் மட்டுமல்ல அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடமும் அன்னபூர்ணா, தனக்கு நேர்ந்த அவலம் குறித்து ஆவேசத்துடன் கண்ணீர் மல்க விளக்கமாகப் புகார் அளித்தார்.