2008 ஆம் ஆண்டில் நாகபட்டினத்தில் ஒரு நபர் 14.5 ஏக்கர் விவசாய நிலத்தை விலைக்கு வாங்குகிறார். சுமார் இரண்டு வருடங்கள் அந்த நிலத்தில் விவசாயம் எதுவும் செய்யாமல் அப்படியே வெறுமையாக விட்டு வைக்கிறார். 2010 ல் அந்த நிலத்தை வீட்டு மனைகளாக்கி விற்கும் பொருட்டு தாஷில்தாரிடம் NOC சான்று பெற்று வீட்டு மனைகளுக்கான லே அவுட் ஒப்புதலுக்காக பஞ்சாயத்து அலுவலக அனுமதியை நாடுகிறார். பொதுவாக குறிப்பிடத்தக்க நிலம் வீட்டுமனைகளாக மாற்றப்படும் போது கிராமப் பஞ்சாயத்துக்காக சாலைகள், பொது இடங்கள் உள்ளிட்ட சில பகுதிகள் பரிசுப்பத்திரமாக வழங்கப்பட வேண்டும் என்பது நியதி. அதன்படி லே அவுட்டுக்கான ஒப்புதல் கிடைத்ததும் நிலத்தில் உடமைதாரர் தனது நிலத்தில் கிராமப் பஞ்சாயத்துக்காக சாலைகள், மற்றும் பொதுப்பயன்பாட்டுக்கான சில பகுதிகளை பரிசுப் பத்திரமாக எழுதித் தருகிறார். அதன்படி தாஷில்தார் அலுவலகத்தில் அவரது நிலம் முதல் தரமான வீட்டுமனை குடியிருப்புப் பகுதியாக பதிவு செய்யவும் படுகிறது.