மறைந்த முதல்வர் ஜெ வின் அத்யந்த தோழியும், ஜெ மறைந்த பின் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டவருமான வி .கே. சசிகலாவின் பெயரை தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிய, அதிமுக உறுப்பினர்கள் வழிமொழிய ஃபிப்ரவரி 5 ஆம் நால் ஞாயிறு அன்று நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராகவும், வி .கே. சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலாவை முதல்வராக்கும் பொருட்டு ஒ.பி.எஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களின் இந்த ஒருமித்த தேர்வை ஒட்டி கடந்த ஃபிப்ரவரி 9 ஆம் நாள் சட்டப்பேரவையில் தனது ஆதரவாளர்களின் பெரும்பான்மையை முன்னிட்டு தமிழக முதல்வராக தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு சசிகலா கடிதம் அனுப்பினார்.