ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஏர்டெல் சூப்பர் சிங்கர் போல ஸ்டார் பிளஸில் ‘தில் ஹை ஹிந்துஸ்தானி’ பாட்டுப்போட்டிக்கு நடுவர் யார் தெரியுமா?

இந்தப் போட்டிக்கான குரல் தேர்வுகள் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் இந்தியாவிலிருக்கும் பிரதான நகரங்கள் சிலவற்றிலும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படுமாம்.

News image
Updated On :27 அக்டோபர் 2016, 4:53 am

விரைவில் கரன் ஜோகரும், ராப் பாடகர் பாட்ஷாவும் இணைந்து ஸ்டார் பிளஸில் ஒளிபரப்பரப்பப் படவிருக்கும் ’தில் ஹை ஹிந்துஸ்தானி’ பாட்டுப் போட்டிக்கு நடுவர்களாக பங்கேற்கவிருக்கிறார்களாம்.
இந்தப் போட்டியின் முக்கிய நோக்கமே பாலிவுட் இசையைப் புதுப்பித்து புத்தம் புதிய இளம் பாடகர்களை உலகுக்கு அறிமுகப்படுத்துவது தானாம். இந்தப் போட்டிக்கான குரல் தேர்வுகள் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் இந்தியாவிலிருக்கும் பிரதான நகரங்கள் சிலவற்றிலும் தொடங்கப்படுவதற்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியிடப்படுமாம். வேறு வேறு ’த்வனிகளில்’ பாடக்கூடிய திறமை பெற்ற தனித்துவமான குரல்களை அடையாளம் காண்பதே இப்போட்டிக்கான முக்கிய குறிக்கோள். 
முன்னதாக தனது  இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா ஷர்மா மற்றும் ஐஸ்வர்யா ராய் பட்சன் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும்‘ஏ தில் ஹை முஷ்கில்’ பட வெளியீட்டுக்காக கரன் காத்திருக்கிறார். படம் வெளியாகி அது தொடர்பான வேலைகள் முடிவுற்றதும் ஸ்டார் பிளஸின் இசைச் சங்கமத்தில் நடுவர் மகுடம் சூடி பாட்ஷாவுடன் இணையவிருக்கிறார் கரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.