டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

பேனாசோனிக்கின் புதிய காற்று வடிகட்டிகள்!

சமீபத்தில் நமது தலைநகர் டெல்லியில் மிகக் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு அங்கு பள்ளி, அலுவலகங்களுக்கெல்லாம் விடுமுறை கூட அறிவித்தார்களே. யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போதைய காற்று மாசுக்கு...

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:47 pm

கார்த்திகா வாசுதேவன்

பேனாசோனிக் நிறுவனம் சமீபத்தில் ஏழு விதமான காற்று வடிகட்டிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த காற்று வடிகட்டிகள் மூலமாக நம்மைச் சூழ்ந்திருக்கும் காற்றில் மிதந்து கொண்டிருக்கக் கூடிய நச்சுத் தன்மை மிகுந்த துகள்கள் வடிகட்டப்படுகின்றன. நேனோ தொழிநுட்பத்தில் தயாரிக்கப் பட்டிருக்கும் இந்த காற்று வடிகட்டிகள் PM2.5 எனும் மிக மிக நுண்ணிய நச்சுத் துகள்களையும் கூட தனியாக வடிகட்டும் தன்மை கொண்டது. என பேனாசோனிக்கின் பொது மேலாளர் ஷையத் மூனிஸ் அலி அல்வி தெரிவித்துள்ளார்.

தங்களது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களுக்கு தரமான பொருட்களை அறிமுகம் செய்வதில் தான் பேனாசோனிக்கின் கெளரவம் நிலைத்திருக்கிறது. தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இந்த காற்று வடிகட்டிகளின் விலை 11,995 ரூபாயில் தொடங்கி 34,995 வரை நீள்கிறது. இந்த வடிகட்டிகளைக் கொண்டு 283 சதுர அடியிலிருந்து 452 சதுர அடிகள் வரையிலான அமைப்புள்ள அறைகளின் உட்காற்றை வடிகட்ட முடியுமாம்.

இதில் ஸ்லீப் மோட், குழந்தைகளின் பாதுகாப்புக்குத் தேவையான சைல்ட் லாக், வடிகட்டிகள் ரிப்பேரானால் மாற்றிக் கொள்ளும் வசதி எல்லாம் இருக்கிறது. மேலும் இந்த புத்தம் புதிய காற்று வடிகட்டிகளின் ஆயுள் பத்து வருடங்கள் என்று பேனாசோனிக் நிர்ணயித்திருக்கிறது.

சமீபத்தில் நமது தலைநகர் டெல்லியில் மிகக் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு அங்கு பள்ளி, அலுவலகங்களுக்கெல்லாம் விடுமுறை கூட அறிவித்தார்களே. யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போதைய காற்று மாசுக்கு மிகப் பெரும் காரணமாக இருந்தது இந்த PM2.5 தான். கண்ணுக்குத் தெரியாத மிக மிக நுண்ணிய நச்சுத் துகள்களான இவற்றால் நுரையீரலுக்குப் பெரும் பாதிப்பு உண்டாம். இந்தப் புதிய காற்று வடிகட்டிகள் இவற்றைக் கூட வடிகட்டி விடும் என்பது சற்று ஆறுதலான விசயமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.