சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

பேனாசோனிக்கின் புதிய காற்று வடிகட்டிகள்!

சமீபத்தில் நமது தலைநகர் டெல்லியில் மிகக் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு அங்கு பள்ளி, அலுவலகங்களுக்கெல்லாம் விடுமுறை கூட அறிவித்தார்களே. யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போதைய காற்று மாசுக்கு...

News image
Updated On :25 நவம்பர் 2016, 12:12 pm

பேனாசோனிக் நிறுவனம் சமீபத்தில் ஏழு விதமான காற்று வடிகட்டிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த காற்று வடிகட்டிகள் மூலமாக நம்மைச் சூழ்ந்திருக்கும் காற்றில் மிதந்து கொண்டிருக்கக் கூடிய நச்சுத் தன்மை மிகுந்த துகள்கள் வடிகட்டப்படுகின்றன. நேனோ தொழிநுட்பத்தில் தயாரிக்கப் பட்டிருக்கும் இந்த காற்று வடிகட்டிகள் PM2.5 எனும் மிக மிக நுண்ணிய நச்சுத் துகள்களையும் கூட தனியாக வடிகட்டும் தன்மை கொண்டது. என பேனாசோனிக்கின் பொது மேலாளர் ஷையத் மூனிஸ் அலி அல்வி தெரிவித்துள்ளார்.

தங்களது வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி அவர்களுக்கு தரமான பொருட்களை அறிமுகம் செய்வதில் தான் பேனாசோனிக்கின் கெளரவம் நிலைத்திருக்கிறது. தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ள இந்த காற்று வடிகட்டிகளின் விலை 11,995 ரூபாயில் தொடங்கி 34,995 வரை நீள்கிறது. இந்த வடிகட்டிகளைக் கொண்டு 283 சதுர அடியிலிருந்து 452 சதுர அடிகள் வரையிலான அமைப்புள்ள அறைகளின் உட்காற்றை வடிகட்ட முடியுமாம்.

இதில் ஸ்லீப் மோட், குழந்தைகளின் பாதுகாப்புக்குத் தேவையான சைல்ட் லாக், வடிகட்டிகள் ரிப்பேரானால் மாற்றிக் கொள்ளும் வசதி எல்லாம் இருக்கிறது. மேலும் இந்த புத்தம் புதிய காற்று வடிகட்டிகளின் ஆயுள் பத்து வருடங்கள் என்று பேனாசோனிக் நிர்ணயித்திருக்கிறது.

சமீபத்தில் நமது தலைநகர் டெல்லியில் மிகக் கடுமையான காற்று மாசு ஏற்பட்டு அங்கு பள்ளி, அலுவலகங்களுக்கெல்லாம் விடுமுறை கூட அறிவித்தார்களே. யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அப்போதைய காற்று மாசுக்கு மிகப் பெரும் காரணமாக இருந்தது இந்த PM2.5 தான். கண்ணுக்குத் தெரியாத மிக மிக நுண்ணிய நச்சுத் துகள்களான இவற்றால் நுரையீரலுக்குப் பெரும் பாதிப்பு உண்டாம். இந்தப் புதிய காற்று வடிகட்டிகள் இவற்றைக் கூட வடிகட்டி விடும் என்பது சற்று ஆறுதலான விசயமே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.