சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

ஆஸ்துமா மற்றும் அலர்ஜியைக் கட்டுப்படுத்த புது மருந்து!

“மருந்துகள் நோயின்  கடுமையைக் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர உடலில் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்துவனவாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிறகு எந்த நோயிலிருந்தும் நம்மால் மீளவே முடியாமல்

News image
Updated On :25 நவம்பர் 2016, 5:51 am

நோபல் பரிசு பெற்ற ஆஸ்திரேலிய விஞ்ஞானி பாரி மார்ஷல் ஆஸ்துமா மற்றும் அலர்ஜியைக் முற்றிலும் கட்டுப்படுத்த புது மருந்து ஒன்றைக் கண்டறிந்துள்ளாராம். இந்த மருந்தை மாத்திரைகள், பொடிகள், அல்லது சிரப்புகளாக எடுத்துக் கொள்ளலாம். ‘இம்பேலன்ஸ் எனும் பெயர் கொண்ட இந்த மருந்து நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்துவதை தவிர்த்து நோயின் தாக்கத்தை மட்டுமே குறைக்கும் வகையில் உருவாக்கப் பட்டுள்ளதாம்.

பாரி மார்ஷல் அடிப்படையில் மேற்கு ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகத்தில் நுண்ணுயிரியல் துறைப் பேராசிரியர். 2005 ஆம் ஆண்டில் உடலியல் பிரிவில் வயிற்றுப் புண் தொடர்பான ஆராய்சிக் கட்டுரை சமர்பித்ததற்காக அந்த ஆண்டுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற அந்த ஆராய்சியின் நீட்சியில் பாரி இந்த மருந்தைக் கண்டறிந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

தனது புதிய மருந்து குறிந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் பாரி மார்ஷல் தெரிவித்தது யாதெனில் “மருந்துகள் நோயின்  கடுமையைக் கட்டுப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர உடலில் எதிர்ப்பு சக்தியைக் கட்டுப்படுத்துவனவாக இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பிறகு எந்த நோயிலிருந்தும் நம்மால் மீளவே முடியாமல் போகும்” என்றார்.

கடந்த 7 ஆண்டுகளின் கடின உழைப்பின் பலனாக இந்த மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 100 % பாதுகாப்பான இந்த மருந்து நிச்சயம் உங்களது உடலில் நோய் தடுப்பாற்றல் அமைப்பை நீக்காது. குழந்தைகளுக்கு உணவிலோ, பானங்களிலோ கலந்து கூட இந்த மருந்தை உட்கொள்ளச் செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.