டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

2016 ல்‘ஜெ’ தொடங்கி வைத்த சமூக நலத் திட்டங்கள்- ஒரு பார்வை!

ஜெ தொடங்கி வைத்த திட்டங்களில் எவற்றுக்கெல்லாம் நீண்ட ஆயுள் இருக்கப் போகிறது? எவையெல்லாம் மறக்கப் பட்டு கிடப்பில் போடப்படும் என்பதை அடுத்தாண்டு இறுதி வரை பொறுத்திருந்து காணலாம்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 7:02 pm

கார்த்திகா வாசுதேவன்

2015 ல் சொத்துக்குவிப்பு வழக்கில் மைக்கேல் டி. குன்ஹா தீர்ப்ப்பு மூலமாக சிறைத்தண்டனை அனுபவித்து, மீண்டும் நீதிபதி குமாரசாமி மூலம் வெளிவந்தது வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த ஆண்டு முழுவதுமே மிக மிகப் பரப்பரப்பான ஆண்டு தான். அந்தப் பரபரப்பின் உச்சகட்டமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கடைசி நாளுக்கு முந்தைய நாள் வரையிலும் ஜெ மக்களிடையே  காணொலி மூலமோ அல்லது வாட்ஸப் உரையாடல் மூலமோ ஏதோ ஒருவகையில் இயங்கிக் கொண்டு தான் இருந்திருக்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜெ தொடங்கி வைத்த பல்வேறு நலத்திட்டங்களை இப்போது காண்போம். ஜெ மறைவுக்குப் பின்னரும் இப்போது தொடர்ந்து கொண்டிருப்பது அதிமுக ஆட்சி தான். ஜெ தொடங்கி வைத்த திட்டங்களில் எவற்றுக்கெல்லாம் நீண்ட ஆயுள் இருக்கப் போகிறது? எவையெல்லாம் மறக்கப் பட்டு கிடப்பில் போடப்படும் என்பதை அடுத்தாண்டு இறுதி வரை பொறுத்திருந்து காணலாம். இதுவரை அவர் தொடங்கி வைத்த திட்டங்களில் எவையெல்லாம் வெற்றிகரமாக புழக்கத்தில் இருக்கின்றன என்பதையும் மக்களாகிய நாம் தான் கண்டுணர வேண்டும். அந்த வகையில் தான் சுயநினைவுடன் இயங்கிக் கொண்டிருந்த கடைசி நாள் வரை ஜெ தொடங்கி வைத்த நற்காரியங்கள் இதோ;

ஜனவரி:

  • 2016 ஜனவரி 11 ஆம் நாள் மறைந்த முதல்வர் ஜெ, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் ரூ.87.42 கோடியில் கட்டப்பட்ட 292 கட்டடங்கள், 6 அம்மா மருந்தகங்கள், 54 அம்மா அமுதல் பல்பொருள் அங்காடிகள், 13 பண்ணை பசுமை கடைகளை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
  • ஜனவரி 30 ஆம் நாள் சென்னை மாநகராட்சியை, பெருநகர சென்னை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதனை காணொலிக் காட்சி மூலமாக ஜெ தொடங்கி வைத்தார்.

பிப்ரவரி:

  • பிப்ரவரி 8 ஆம் நாள் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில் ரூ 70 லட்சம் மதிப்பில் 41 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் சேவையை முதல்வர் ஜெ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
  • பிப்ரவரி 13 ஆம் நாள் சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
  • பிப்ரவரி 18 ல் சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான திட்டத்தை சட்டப்பேரவையில் அறிவித்தார்.
  • பிப்ரவரி 20 ல் தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 % இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப் பட்டது.

மார்ச்:

மார்ச் 1 ஆம் தேதி அரசு கேபிள் டி.வி மூலம், இல்லந்தோறும் இணைய வசதி திட்டத்தை முதல்வர் ஜெ தொடங்கி வைத்தார்.

ஏப்ரல்:

ஏப்ரல் மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் ஜெ பிஸியாக இருந்தார். அதிமுக தேர்தல் அறிக்கை தமிழக மக்களுக்கு பல்வேறு இலவசங்களை அள்ளி வழங்கப் போவதாக அறிவித்தது.

மே:

மே 19 ல் ஜெ தலைமையிலான அதிமுக தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மே 25 ல் தமிழக முதல்வராக 6 வது முறையாக செல்வி. டாக்டர். ஜெ. ஜெயலலிதா ட்முறையாகத் தேர்வு செய்யப் பட்டார். பதவியேற்றதும் ஜெ தனது தேர்தல் வாக்குறூதிகளை நிறவேற்றும் பொருட்டு;

  • வீடுகளுக்கு முதல் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம்.
  • 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் மற்றும் டாஸ்மாக் திறப்பு நேரம் மாற்றம். 
  • பெண்களின் திருமண உதவியாக தாலிக்கு 8 கிராம் தங்கம்.
  • கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டும், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் அளவிலும் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப் படும்.
  •  2016 ஆம் ஆண்டின்  மார்ச் 1 வரை கூட்டுறவு சங்கங்களிடம் சிறு, குறு விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி.

எனும் முக்கியமான ஐந்து கோப்புகளில் முதற் கையெழுத்தை இட்டார்.

ஆகஸ்டு:

  • ஆகஸ்டு 10 ல் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1 வது யூனிட்டை பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின், முதல்வர் ஜெ ஆகியோர் காணொலிக்காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
  • ஆகஸ்டு 12 ல் 25 மாவட்டங்களில் வாகன நெரிசலைக் குறைப்பதற்கு 80 பாலங்கள், 142 கிமீ மாநில சாலைகள் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்கு முதல்வர் ஜெ ரூ.900 கோடி அறிவிப்பு.

செப்டம்பர்:

  • செப்டம்பர் 1 ல் ஆசிய வளர்ச்சி வங்கி மூலம் தமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களின் மேம்பாட்டுக்கென ரூ.403 கோடியில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் படும் என் ஜெ அறிவித்தார்.
  • செப்டம்பர் 21 மெட்ரோ ரயில் திட்டத்தில் விமான நிலையம் முதல் சின்னமலை வரையிலான இரண்டாம் வழித்தடத்தை முதல்வர் ஜெ தொடங்கி வைத்தார்.

மறுநாள் செப்டம்பர் 22 அன்று காய்ச்சல் மற்றூம் நீர்ச்சத்து இழப்பு காரணமாக முதல்வர் ஜெ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். முதலில் செப்டம்பர் 25 ஆம் நாள் ஜெ வுக்கு வெளிநாட்டு சிகிச்சை தேவையில்லை என்றது மருத்துவமனை நிர்வாகம். ஆனால் செப்டம்பர் 30 ல் ஜெ வுக்கு சிகிச்சை அளிக்க லண்டன் தீவிர சிகிச்சைப் பிரிவு நிபுணர் ரிச்சர்டு பீல் சென்னைக்கு வரவழைக்கப் பட்டார். தொடர்ந்து நடைபெற்ற விசயங்களும், அதற்குப் பின் நடந்தவை அனைத்தும் தமிழக மக்கள் மனதில் என்றும் நீங்கா நினைவுகளாகி விட்டவை.

ஜெ மறைவை அடுத்து  ஒ.பி.எஸ் தமிழக முதல்வராகப் பதவியேற்றிருக்கிறார். ஜெ விட்டுச் சென்ற அனைத்து பொறுப்புகளையும், பணிகளையும் ஒ.பி.எஸ் தலைமையிலான அரசு  நிறைவேற்றுமா? அல்லது தமிழகம் இன்னொரு புது முதல்வரை எதிர்நோக்கவிருக்கிறதா? என்ற கேள்விகளுக்கான விடையெல்லாம் காலத்தின் கைகளில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.